சிவபுராணம் பாடல் 3

சிவபுராணம் பாடல் 3



ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி

தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 

பொருள்:


எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டவனின் திருவடி போற்றி.

எம் தந்தை என நின்று அருளுபவனின் திருவடி போற்றி.

ஒளி வடிவானவனின் திருவடி போற்றி.

சிவன் எனப்பெறும் செம்பொருளின் சிவந்த திருவடி போற்றி.

அன்பினில் நிற்பவனான தூயவனின் திருவடி போற்றி.

மாயப் பிறப்பினை நீக்கும் உயர்ந்தோனின் திருவடி போற்றி.

அமைப்பு சிறந்து விளங்கும் திருப்பெருந்துறையில் இருக்கும் நம் தேவனின் திருவடி போற்றி.


குறிப்பு:


1. தேசு - ஒளி (சிபிவிஷ்டாய நம: - சிவ அஷ்டோத்தரம் )


திருச்சிற்றம்பலம் !!!
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post