தானங்களும், அவற்றின் பலன்களும்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தானங்களும், அவற்றின் பலன்களும் பற்றிய பதிவுகள் :

தானம் செய்வது மிகச் சிறந்த விஷயமாகும். இருப்பவன் இல்லாதவனுக்கு கொடுக்கும் போது இறைவனாகவே மதிக்கப்படுகிறான். அவ்வாறு தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்..

1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்.

2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்.

3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்.

4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்.

5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்.

6. நெய் தானம் தர நோயைப் போக்கும்.

7. பால் தானம் தர துக்கநிலை மாறும்.

8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்.

9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்.

10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்.

11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்.

12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்.

13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்.

14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்.

15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.

Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post