விநாயகரின் ஆறுபடை வீடுகள்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விநாயகரின் ஆறுபடை வீடுகள் பற்றிய பதிவுகள் :

ஆறுபடை வீடு என்று சொன்னாலே முருகன் தான் நினைவிற்கு வருவார். ஏன்னென்றால் முருகனுக்குத்தான் திருச்செந்தூர், திருத்தணி, திருப்பரங்குன்றம், பழனி, பழமுதிர்சோலை, சுவாமிமலை என்னும் ஆறுபடை வீடு உள்ளது. ஆனால் முருகன் மட்டுமின்றி விநாயகருக்கும் ஆறுபடை வீடு உள்ளது. 

1. திருவண்ணாமலை :

இத்தலத்தில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் அல்லல் போம் விநாயகர். இவரை வழிபட அல்லல்கள் தீரும்.

2. விருத்தாசலம் :

இங்குள்ள ஆலயத்தில் எழுந்தருளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் என்று பெயர். செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும்.

3. திருக்கடவூர் :

இங்கு எழுந்தருளும் பிள்ளையாருக்கு கள்ள வாரணப் பிள்ளையார் என்று பெயர். இவரை வணங்க நீண்ட ஆயுள் கிடைக்கும்.

4. மதுரை :

இங்கு அமைந்துள்ள பிள்ளையாருக்கு சித்தி விநாயகர் என்று பெயர். நினைத்தது நிறைவேற இவரை வணங்கலாம்.

5. பிள்ளையார்பட்டி :

இங்கு அருள் புரிபவர் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர். இவரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.

6. திருநாரையூர் :

இங்கு ஆட்சி புரியம் பிள்ளையாருக்கு பொண்ணாப் பிள்ளையார் என்று பெயர். இவரை வணங்க அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.

ஆறுபடை விநாயகரை போற்றி வணங்கினால் கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும். சித்தி பெற்ற விநாயகாரை நாளும் போற்றி நன்மைகளை பெறுவோம்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post