மங்களகரமான நவராத்திரி நாள் 3, பூஜை முறை, நேரம், நைவேத்தியம், மந்திரம் மற்றும் பலன்கள்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மங்களகரமான நவராத்திரி நாள் 3, பூஜை முறை, நேரம், நைவேத்தியம், மந்திரம் மற்றும் பலன்கள் பற்றிய பதிவுகள் :

நவராத்திரியின் 3ம் நாள் மகிஷனை அழிக்கும் வடிவில் அம்பாள் வராகியாக காட்சி தருகிறாள். சக்தி தேவியின் மகிமையைக் கொண்டாடவும், அம்பாளின் அருளைப் பெறவும், நவராத்திரி விழா புரட்டாசி அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்கள் நீடிக்கும். 

ஒன்பது வகையான அலங்காரங்கள், பூஜைகள், விருந்தினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்தல், தாம்பூலம் வழங்குதல் போன்ற ஒன்பது நாட்களுடன் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. 

நவராத்திரி நாள் 3: 

செப்டம்பர் 28, புதன்

வழிபட வேண்டிய சக்தி தேவி: 

ஸ்ரீ வாராஹி அம்மன், இந்திராணி

திதி: திரிதியை

நிறம்: கரு நீலம்

மலர்: சம்பங்கி, துளசி

கோலம்: பூக்களால் கோலம் போட வேண்டும்

ராகம்: காம்போதி ராகம்

நைவேத்தியம்

காலை நேரத்தில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் மாலை நேரத்தில் வெள்ளை காராமணி சுண்டல்

மந்திரம்

மஹா வாராகி பாடலின் 15வது பாசுரம் மிகவும் சிறப்பானது.

"ஐயும் கிலியும் என்று தொண்டர் போட்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியும் மலர்க்
கையும், பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வாராகி மலர்க்கொடியே"

பலன்கள்

பயம் நீக்கும், கடன் தொல்லை நீங்கும், எதிரிகள் காணாமல் போவார்கள்

நவராத்திரியின் மூன்றாம் நாளில் வாராஹி தேவியையும், இந்திராணியையும் வழிபடலாம். அசுரனை அழித்த கோலத்தில் வராகி அம்மன் காட்சி தருவாள். இந்நாளில் அம்பாளுக்கு நீல மலர்கள் மற்றும் கருப்பு துளசி அர்ச்சனை செய்வது சிறப்பு. வாராஹி தேவியை வழிபடுவதால் தைரியம், மனக் குழப்பம், பகுத்தறிவற்ற பயம், குழப்பம் நீங்கும். எதிரிகள் மறைவார்கள்.

இந்திராணி தேவி சப்த கன்னிகளில் ஒருவர். வெள்ளை யானை இவருடைய வாகனம். இந்திராணியை வழிபடுவதால் செல்வமும் உயர் பதவியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வழிபாட்டு முறை:

பூஜை அறையில் கொலு வைத்தால் கொலுவின் முன் அமர்ந்து அந்தந்த அம்மனுக்கு தினமும் மந்திரம் சொல்லலாம்.

இன்று வாராஹி ஸ்லோகம் சொல்லி அவருக்கு 32 மணிகள் கொண்ட கவசம் வைத்து பூஜை செய்யலாம். அம்பாளின் திருவுருவத்தை அலங்கரிப்பதற்கு மாலை அணிவிக்கலாம். வாராஹி தேவியின் சிலை இல்லை என்றால், அம்மன் படத்திற்கு மாலை அணிவிக்கலாம்.

கொலு வைத்த இடத்தில் ஆரத்தி செய்து, பூ வைத்து, முதல் படிக்கு கீழே விளக்கு ஏற்றி, வெற்றிலை பாக்கு வைத்து, நைவேத்தியம் செய்து, கற்பூரம் படைக்க வேண்டும். கொலு இடம் மற்றும் பூஜை அறை தனித்தனியாக இருந்தால் இரண்டு இடங்களிலும் கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும்.

புதன் கிழமை வராஹிக்கு மிகவும் உகந்த நாள், கடன் தொல்லை நீங்க, கண் சோர்வு நீங்க, இன்று வீட்டில் வாராஹியை வழிபட்டு வாராஹி அம்மன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யலாம்.

பூஜை நேரங்கள்:

காலை 9 மணிக்குள், மாலை 6 மணிக்குப் பிறகு.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post