மங்களகரமான நவராத்திரி நாள் 9, பூஜை முறை, நேரம், நைவேத்யம், மந்திரம் மற்றும் பலன்கள்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மங்களகரமான நவராத்திரி நாள் 9, பூஜை முறை, நேரம், நைவேத்யம், மந்திரம் மற்றும் பலன்கள் பற்றிய பதிவுகள் :

ஒன்பது நாட்களில் கடைசி நாள் நவமி திதியில் வருகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களில், முதல் மூன்று நாட்களில் பார்வதி தேவியையும், அடுத்த மூன்று நாட்களில் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியையும் வழிபடுவது வழக்கம். சரஸ்வதி தேவியின் அருளைப் பெற நவமி திதி மஹா நவமி மற்றும் சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது.

வழிபட வேண்டிய சக்தி தேவி: சரஸ்வதி தேவி, அன்னை பரமேஸ்வரி, சாமுண்டா தேவி

திதி: நவமி

நிறம்: இளஞ்சிவப்பு

மலர்: வெள்ளைப் பூக்கள், கதம்பம்

கோலம்: தாமரை கோலம், நறுமண மலர்கள், பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி கோலம்

ராகம்: வசந்த ராகம்

நைவேத்தியம்: காலையில் சர்க்கரைப் பொங்கல், மாலையில் உளுந்து சுண்டல்

மந்திரம்: சரஸ்வதி நாமாவளி, சரஸ்வதி தேவி பாடல்கள், சௌந்தர்ய லஹரி, லக்ஷ்மி அஷ்டோத்திரம், லக்ஷ்மி சஹஸ்ரநாமம்

பலன்கள்: கலையில் தேர்ச்சி, கல்வியில் முன்னேற்றம், குடும்பத்தில் செழிப்பு, சந்ததி வளர்ச்சி, நோயிலிருந்து பாதுகாப்பு

சப்தமி திதியில் சாம்பவி தேவியை சரஸ்வதி தேவியாக வழிபட்டாலும், நவராத்திரியின் ஒன்பதாம் நாளான நவமி அதிக விசேஷமானது.

கலை, கல்வியில் சிறந்து விளங்க, படிப்பில் உள்ள தடைகள் நீங்க, முன்னேற்றம் அடைய, நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் கலைகளுக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வழிபடலாம்.

ருத்ரனின் அம்சமாகக் கருதப்படும் சாமுண்டா தேவி சப்த கன்னிகளில் ஒருவர். இவரை வழிபடுபவர்களுக்கு தீய சக்தி, கண்பார்வை, சூனியம் போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படும் அசாத்திய பயம் நீங்கும்.

வழிபாட்டு முறை:

நவராத்திரியில் யாரையும் வீட்டுக்கு அழைத்து தாம்பூலம் கொடுக்காமல் இருந்தால் இன்றே செய்யலாம்.

3, 6, 9 என்ற எண்ணிக்கையில் பெண்களையும் சிறுமிகளையும் வீட்டிற்கு அழைத்து விருந்து பரிமாறலாம்.

குறைந்த பட்சம் ஒரு பெண் குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்று பராமரித்து நைவேத்தியம் செய்ய வேண்டும். வளையல், மருதாணி, பூ, பழம், தேங்காய், வெற்றிலை என எவ்வளவு வேண்டுமானாலும் தாம்பூலம் கொடுக்கலாம்.

அதேபோல, பெண்களுக்கு ரவிக்கைத் துணி மற்றும் கண்ணாடி வளையலுடன் தாம்பூலம் கொடுக்கலாம். இன்று குறைந்தது 3 பெண்களுக்கு தாம்பூலம் தவறாமல் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

கொலுவை வைத்த இடத்தில் தாமரை வடிவில் கோலம் போட்டு, விளக்கு ஏற்றி, தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து, கற்பூரம் வைத்து நைவேத்தியம் செய்து ஆரத்தி செய்ய வேண்டும். கொலு இடம் மற்றும் பூஜை அறை தனித்தனியாக இருந்தால் இரண்டு இடங்களிலும் கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும்.

கல்விக்கு அதிபதி சரஸ்வதி என்பதால் அன்றைய தினம் பெண்கள், ஆண் குழந்தைகளுக்கு எவ்வளவு கல்விப் பொருட்களை வாங்கித் தரலாம். வெற்றிலை, தாம்பூலம் ஆகியவற்றுடன் மாதுளம்பழம் வைப்பது சிறப்பு.

செவ்வாய்கிழமை என்பதால் நவராத்திரி பூஜை செய்த பின் தீபம் ஏற்றி துர்க்கை அம்மனை வழிபடலாம்.

பூஜை நேரங்கள்:

காலை 9 மணிக்குள்

மாலை 6 மணிக்குப் பிறகு

கொலு வைக்காதவர்கள் வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையில் உள்ள படங்களுக்கு சந்தனம், குங்குமம் தடவி, மலர் மாலை அணிவித்து, வழக்கம் போல் பூஜை, நைவேத்தியம் செய்யலாம்.

Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post