ஆலயங்களில் படைக்கும் அதிசய நைவேத்தியம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆலயங்களில் படைக்கும் அதிசய நைவேத்தியம் பற்றிய பதிவுகள் :

திருவாரூர் தியாகேசப் பெருமானுக்குத் தூதுவளைக் கீரையும் பாகற்காயும் நைவேத்தியமாகப் படைக்கப்படுவது தனிச்சிறப்பாகும்.

• திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் முழுநிலவு நாளன்று அன்னாபிஷேகத்துடன் பால், மாங்காய் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

• கேரளா திருமாந்தங்குன்று பகவதி கோயிலில் தேங்காய், அரிசி, சர்க்கரை, வாழைப்பழம் சேர்த்து தயாரிக்கப்படும் சதசதம் என்ற பாயசம் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

* திருவாரூர் தியாகராஜ பெருமானுக்கு தினமும் அர்த்த சாம பூஜையின்போது தேன்குழல், நெய் முறுக்கு செய்து வைத்து நைவேத்தியம் செய்கின்றனர்.

* கேரள மாநிலம், கொட்டாரக்கரா தலத்திலுள்ள விநாயகருக்கு "நெய்யப்ப கணபதி' என்று திருநாமம். இத்தல விநாயகரை வேண்டி நெய் அப்பம் செய்து வைத்து நிவேதனம் செய்து வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post