சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதங்கள்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதங்கள் பற்றிய பதிவுகள் :

01) இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. (Center Point of World’s Magnetic Equator).

02) பஞ்சபூதக் கோயில்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம்., காற்றைக் குறிக்கும் காலஹஸ்தி ஆலயம் (நிலத்தை குறிக்கும்) காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees., 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE) அமைந்துள்ளது, இன்று Google Map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்., புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

03) மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும்., மனித உடலில் இருக்கும் 9 துவாரங்களை குறிகின்றது.

04) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது. இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21,600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15 x 60 x 24 = 21,600)

05) இந்த 21,600 தகடுகளை பதிக்க 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

06) திருமூலரின் திருமந்திரத்தில்”மானுடராக்கை வடிவு சிவலிங்கம்…மானுடராக்கை வடிவு சிதம்பரம்…மானுடராக்கை வடிவு சதாசிவம்…மானுடராக்கை வடிவு திருக்கூத்தே…”என்று கூறுகிறார், அதாவது “மனிதன் வடிவில் சிவலிங்கம்… அதுவே சிதம்பரம்… அதுவே சதாசிவம்… அதுவே அவரின் நடனம்…” என்ற பொருளைக் குறிகின்றது.

07) “பொன்னம்பலம்” சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது. இது நம் உடலில் இதயத்தைக் குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும். இந்தப் படிகளை “பஞ்சாட்சர படி” என்று அழைக்கப்படுகின்றது. அதாவது “சி.,வா.,ய.,ந.,ம” என்ற ஐந்து எழுத்தே அது. “கனகசபை” பிற கோயில்களில் இருப்பதைப் போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

08) பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும்., சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM). இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள் (CROSS BEAMS), மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

09) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்களும்., 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்களும்., 6 சாஸ்திரங்களையும்., அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள்., 18 புராணங்களையும் குறிக்கின்றது.

10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் “Cosmic Dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

1 Comments

  1. Om namasivaya
    Siva siva siva siva siva siva siva Siva siva siva siva siva siva siva Siva siva siva siva siva siva siva Siva siva siva siva siva siva siva

    ReplyDelete
Previous Post Next Post