சிவ வழிபாடும் அவற்றிற்குண்டான பலன்களும்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவவழிபாடும் அவற்றிற்குண்டான பலன்களும் பற்றிய பதிவுகள் :

சிவபெருமானுக்கு நாம் படைக்கும் நைவேத்திய பொருட்களால் கிடைக்கும் பலன்கள் :

1. தயிர் சாதம், நீர் மோர் - மூல பவுத்திரம், எலும்புருக்கி நோய் தீரும்.

2. பால், சர்க்கரைப் பொங்கல் - வயிற்று கோளாறு தீரும்.

3. தேன், திணை மாவு - குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

4. தயிர் சாதம் - காரியத் தடை நீங்கும்.

5. எலுமிச்சை, தேங்காய் சாதம் - அடிவயிற்றில் இருந்து தொடை வரை உள்ள நோய்கள் தீரும்.

6. வெண்பொங்கல், கடலை, சுண்டல்-ஆஸ்துமா, மூச்சு சம்மந்தமான நோய் தீரும்.

7. பங்குனி மாத பிரதோஷத்தன்று தேங்காய் சாதம், தக்காளி சாதம்- மணக்கிலேசம், பித்தம், பைத்தியம் தீரும்.


சிவலிங்க வழிபாடும், பலன்களும்:

தர்ப்பைப் புல் லிங்கம் - லட்சுமி கடாட்சம் 

ஆற்றுமணல் லிங்கம் - மோட்சம்

வெண்ணெய் லிங்கம் - நல்வாழ்வு

அரிசிமாவு லிங்கம் - சிறப்புகள் சேரும்

அன்ன லிங்கம் - தீர்க்காயுள்

களிமண் லிங்கம் - மனச்சாந்தி

பசுஞ்சாண லிங்கம் - ஆரோக்கியம்


சிவபூஜைக்குரிய மலர்கள்- பலன்கள்:

செந்தாமரை- தனலாபம், வியாபார விருத்தி, ஆயுள் விருத்தி

மனோரஞ்சிதம், பாரிஜாதம்-பக்தி, தம்பதி ஒற்றுமை, ஆயுள்விருத்தி

வெண்தாமரை, நந்தியாவட்டை, மல்லிகை, இருவாட்சி-மனச்சஞ்சலம் நீங்கி, புத்திக்கூர்மை ஏற்படும். சகலகலாவிருத்தி.

மாசிப்பச்சை, மரிக்கொழுந்து-நல்ல விவேகம், சுகபோகங்கள், உறவினர் ஒற்றுமை உண்டாகும்.

மஞ்சள் அரளி, தங்க அரளி, செவ்வந்தி-கடன் நீங்கும் கன்னியருக்கு திருமண பாக்கியம் ஏற்படும்.

செம்பருத்தி, அடுக்கு அரளி- புகழ், தொழில் விருத்தி.

நீலச்சங்கு-அவச்சொல், அபாண்டம், தரித்திரம் நீங்கும் அருளும் ஆயுளும் கிட்டும்.

வில்வம் கருந்துளசி, மகிழம்பூ- சங்கடங்கள் நீங்கி, சகலகாரியமும் கைக்கூடும்.

தாமரை, செண்பகம் ஆகியவற்றை மொட்டுகளாகவும் பூஜை செய்யலாம். ஏனையவை மலர்ந்திருக்க வேண்டும்.குங்குமப்பூ தவிர மற்ற முள் உள்ள பூக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல. 

கிளுவை, விளா, வெண்நொச்சி, மாவிலங்கை, வில்வம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி நாள்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்க கூடாது.

சிவபூஜைக்கான மாதங்களும், மலர்களும்:

சித்திரை-பலாசம், 

வைகாசி-புன்னை, 

ஆனி- வெள்ளெருக்கு, 

ஆடி-அரளி, 

ஆவணி-செண்பகம், 

புரட்டாசி- கொன்றை, 

ஐப்பசி-தும்பை,

கார்த்திகை-கத்திரி, 

மார்கழி-பட்டி, 

தை- தாமரை, 

மாசி- நீலோத்பலம், 

பங்குனி-மல்லிகை.

Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post