சனி பிரதோஷம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சனி பிரதோஷம் பற்றிய பதிவுகள் :

சிவ பெருமானை வழிபடுவதற்கு உகந்த திதி திரியோதசி திதியாகும். சிவனுக்கு உரிய அஷ்ட விரதங்களில் ஒன்று பிரதோஷ விரதம். தினமும் மாலை 04.30 முதல் 6 வரையிலான ஒன்றரை மணி நேரம் பிரதோஷ காலம் ஆகும். 

தினமும் வரும் பிரதோஷத்திற்கு நித்திய பிரதோஷம் என்று பெயர். திரியோதசி திதியில் வரும் பிரதோஷ காலத்தில் சிவ பூஜை செய்வதும், சிவ வழிபாடு செய்வதும் அனைத்து விதமான கஷ்டங்களையும் போக்கும் தன்மை கொண்டதாகும். பிரதோஷ வழிபாடு சிறப்பானது என்றாலும் திங்கட்கிழமையில் வரும் சோமவார பிரதோஷம் இன்னும் சிறப்பு வாய்ந்ததாகும். 

அதை விட சிறப்பு வாய்ந்தது சனிக்கிழமையில் வரும் சனி பிரதோஷம் ஆகும். இதுகுறித்து விரிவாக நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

சிவ பெருமான், சனி பகவானின் குரு ஆவார். அதனால் சனி பிரதோஷத்தன்று விரதமிருந்து சிவனை வழிபடுபவர்களுக்கு சனி பகவான் எந்த துன்பமும் அளிப்பதில்லை. மாறாக அமைதியையும், ஆசியையும் வழங்குவார். 

குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்பவர்கள் சனி திரியோதசி அன்று விரதம் இருப்பது சிறப்பானது.

சனி பிரதோஷத்தன்று விரதம் இருந்தால் சனியின் தீய பாதிப்புக்களில் இருந்து விடுபட முடியும். சனி பிரதோஷம் நாளில் விரதம் இருப்பவர்கள் பணம் பிரச்சனைகள் உள்ளிட்ட அனைத்து விதமான துன்பங்களில் இருந்தும் விடுபடுவார்கள். 

இந்த நாளில் தசரத சனி ஸ்தோத்திரம் பாராயணம் செய்தால் சனியின் பரிபூரண அருளை பெற முடியும். சனி சாலிசா மற்றும் சிவ சாலிகா படிப்பவர்களுக்கு சனி தோஷத்தின் தாக்கம் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

மாலை சூரிய அஸ்தமனம் துவங்கி, இரவு வரையிலான காலம் பிரதோஷ காலமாகும். இது சந்திரனுக்குரிய நேரமாகும். தண்ணீர் மற்றும் மனித மனத்திற்குரிய தெய்வமாக சந்திரன் உள்ளார். பிரதோஷ காலத்தில் நாம் செய்யும் தியானம், வழிபாடு ஆகியன நமக்கு உடல் மற்றும் மனவலிமையை தரும். 

சனிப்பிரதோஷத்தன்று காலையில் சிவ பெருமானை வழிபட்ட பிறகு சனி பகவானை வழிபடுவது சிறப்பானது. பிரதோஷ விரதத்தை தொடர்ந்து அனுஷ்டித்து வருபவர்களின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றம் என்பது நம்பிக்கை.

பிரதோஷ விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, குளித்து விட்டு, விரதத்தை துவக்கி விட வேண்டும். மாலை வேளையில் சிவன் கோவில்களில் நடக்கும் சிவ பூஜையில் கலந்து கொண்டு, சிவனையும் பார்வதியையும் வழிபட வேண்டும். மிக கடுமையாக விரதம் இருப்பவர்கள் தண்ணீர் கூட எடுத்துக் கொள்ளக் கூடாது. 

உடல் ரீதியான பிரச்சனை உள்ளவர்கள் தண்ணீர் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். வில்வ இலை கொண்டு சிவனை அர்ச்சித்து, தூப தீப ஆராதனை காட்டி வழிபட வேண்டும். பகல் முழுவதும் சிவ சிந்தனையில் இருந்து மாலையில் மீண்டும் குளித்து விட்டு சிவனை வழிபட வேண்டும். மாலையில் பிரதோஷ வழிபாடு முடிந்த பிறகு தண்ணீர் குடித்து பக்தர்கள் தங்களின் விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post